
பெண்ணாக ஏன் பிறந்தாய்...
கண்ணால் எனை தூண்டிலிட்டாய்...
சிக்கிய எனை சிறை எடுத்தாய்...
உன் இமைகளில் என் இளமையை தொலைத்தேன்...
உன் புருவங்களில் என் உருவை தொலைத்தேன்...
கர்வம் துறந்து உன் காலடியில் தாள் பணிந்தேன்...
உன்னில் எனை முழுதாய் புதைத்தேன்...
ஆனால் பெண்ணே உன் பாசம் எனை பரிதவிக்க வைக்கத்தானா...?
உன் நேசம் என் கழுத்தை நெறிக்கத்தானா...?
உன் காதல் எனக்கு கல்லறை எழுப்பத்தானா...?
ஏன் பெண்ணென பிறந்தாய்...?


No comments:
Post a Comment